உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தைகள் தின விழா போட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு

குழந்தைகள் தின விழா போட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு

சிதம்பரம்: குழந்தைகள் தின போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சிதம்பரம் காந்தி மன்றம் மற்றும் கடலுார் மாவட்ட சர்வோதய மண்டல் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஓவியப்போட்டியில் பங்கேற்கும் குழந்தைகள் முன்னாள் பிரதமர் நேரு படத்தை பென்சிலால் வரைந்து பெயர், வகுப்பு, பள்ளி, மொபைல் நம்பர் குறிப்பிட்டு போட்டோ எடுத்தும், பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளி குறிப்பிட்டு 'அண்ணல் காந்தியின் வழியில் நேரு' என்ற தலைப்பில் பேசி வீடியோ பதிவு செய்து, 9443046295 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்கும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 'காந்தியும் நேருவும்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்கள் 'பாரத தேசத்திற்கு நேரு கொண்டு வந்த திட்டங்கள்' என்ற தலைப்பிலும், 200 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதி, செயலாளர், கடலுார் மாவட்ட சர்வோதய மண்டல், எண் 50, லால்கான் தெரு, சிதம்பரம் 608 001 என்ற முகவரிக்கு அஞ்சல் துறை மூலம் வரும், 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை கடலுார் மாவட்ட சர்வோதய மண்டல் செயலாளர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை