உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகார் பெட்டி... கடலூர்

புகார் பெட்டி... கடலூர்

குடிநீர், கழிவறை வசதி தேவை விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொது மக்களுக்கு கழிவறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.சம்பந்தம், மந்தாரக்குப்பம்.முட்புதர்கள் அகற்றப்படுமா?விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேல்முருகன், ஆலடி.சுகாதார வளாகம் தேவைபரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர்கோவில் தெருவில், சுகாதார வளாகம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குமரன், பரங்கிப்பேட்டை.அரசு பஸ் இயக்க கோரிக்கை சிறுபாக்கத்திலிருந்து நேரடியாக கள்ளக்குறிச்சி மற்றும் விருத்தாசலத்திற்கு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேல்முருகன், சிறுபாக்கம்.சிமென்ட் சாலை சேதம் நல்லுார் ஒன்றியத்திலுள்ள ஐவதுகுடி ஊராட்சியிலுள்ள தெருக்களில் சிமென்ட் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.செல்வம், ஐவதுகுடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Venkatesan
செப் 12, 2025 18:56

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா சாத்திப்பட்டு ,நெல்லிதோப்பு எங்கள் ஊரில் நடு ரோட்டில் சாக்கடை தண்ணீர் மற்றும் மழை நீர் தடுத்து அணை கட்டிஉள்ளனர் அதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள் கடந்து செல்லமுடியாமல் ஒரு கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளகிவருகின்றனர்,பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை,இதனை கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடி தீர்வுகாண மக்கள் கோரிக்கையாக வைக்கிறோம்.


Jinnabm Jinnabm
ஜூலை 25, 2025 16:38

பரங்கிப்பேட்டை ஊராச்சொயத்தில் இருக்கும் கோவிலாம்பூண்டி கிராமத்தில்.சுத்தான் தெருவில் கழிவுநீர் தொட்டியிலுருந்து கழிவுநீர் தெருவில் ஓடிக்.கொண்டிருக்கின்றன.குழந்தைகள் தெருவில் விளையாடுகின்றனர் தொற்று நேய் பரவுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது ஆகவே சம்மந்தபட்ட் அதிகாரிகள் இதை பார்த்து சரிசெய்ய்யவும்.


சமீபத்திய செய்தி