உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெருமாள் கோவிலில் சம்வஸ்தர மகோற்சவம்

பெருமாள் கோவிலில் சம்வஸ்தர மகோற்சவம்

விருத்தாசலம் : விருத்தாசலம் வரதராஜபெருமாள் கோவிலில் சம்வஸ்தர மகோற்சவம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உத்சவம் நடந்தது. விருத்தாசலம் சாத்துக்கூடல் ரோட்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி சம்வஸ்தர மகோற்சவம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம் நடந்தது. பூர்வாங் பூஜை, வாஸ்துசாந்தி, கலசபூஜை, பிரதான ஹோமம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அலங்கார திருமஞ்சனம், திருக்கல்யாணம் நடந்தது. நிறைவாக உறியடி உத்சவம் நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆழ்வார் மற்றும் ஆண்டாள் கைங்கர்ய சபையினர் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி