உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிணற்றில் விழுந்த மான் இறந்த நிலையில் மீட்பு

கிணற்றில் விழுந்த மான் இறந்த நிலையில் மீட்பு

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தரைக்கிணற்றில் தவறி விழுந்த ஆண் மானை தீயணைப்புத் துறையினர் இறந்த நிலையில் மீட்டனர்.பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம், பாபுஜி நகர் அருகே உள்ள விளை நிலத்தில் பாழடைந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று பகல் 1:00 மணியளவில் ஆண் மான் ஒன்று விழுந்து கிடப்பதாக விருத்தாசலம் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் வனக்கோட்ட வனவர் சிவக்குமார் தலைமையில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் 2 வயதுடைய மானை இறந்த நிலையில் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ