திட்டக்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு
திட்டக்குடி: திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., திஷா மிட்டல் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, போக்சோ மற்றும் வரதட்சணை குறித்து பதிவு செய்ய வேண்டிய வழக்குகள், அதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள், வழக்கை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர்கள் சுகன்யா, ஆவினங்குடி சுபிக்ஷா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.