மேலும் செய்திகள்
அனுமதியின்றி பட்டாசு விற்றவர் கைது
18-Oct-2025
விருத்தாசலம்: டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இளமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த சாமிதுரை மனைவி பாப்பாத்தி, 65; என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, பாப்பாத்தியை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
18-Oct-2025