கடலுாரில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்
கடலுார் : கடலுாரில் நாளை (7ம் தேதி) மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடக்கிறது.மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மின்வாரிய நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை 7ம் தேதி கடலுார் கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. பொது மக்கள் மின்வாரியம் சார்பில் ஏதேனும் குறையிருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.