உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்தில் மின்மீட்டர் தட்டுப்பாடு: மின்நுகர்வோர் அவதி

கடலுார் மாவட்டத்தில் மின்மீட்டர் தட்டுப்பாடு: மின்நுகர்வோர் அவதி

கடலுார் மாவட்டத்தில் மின்சார மீட்டர் பழுதடைந்தால், பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள மின்வாரியத்தில் தகவல் கொடுப்பது வழக்கம். மின்வாரியத்துறை அதிகாரிகள் அந்த வீட்டை ஆய்வு செய்து,பழுதடைந்த மின்சார மீட்டரை கழட்டி செல்கின்றனர்.ஆனால் புதிய மீட்டர் வைக்க அதிகாரிகள் மாதக்கணக்கில் பொதுமக்களை அலைகழித்து வருகின்றனர்.மேலும் புதியதாக மின்இணைப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு,மீட்டர் ஸ்டாக் இல்லாததால் உடனடியாக மின்இணைப்பு வழங்கப்படுவதில்லை.இதனால் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வரவேண்டிய நிலை உள்ளது. ஒரு சில மீட்டர் வந்தாலும் அதிகாரிகள், வரிசை படி தான் மின்சார மீட்டரை வீடுகளுக்கு பொறுத்தப்படும் என கூறி திருப்பிப அனுப்பி வருகின்றனர்.இதனால் பலர் வீடுகட்டியும் மின்இணைப்பு பெறமுடியாத நிலை உள்ளது.மீட்டர் பழுதான வீடுகளுக்கு மின்சார ரீடிங் எடுக்க வரும் அதிகாரிகள்,மீட்டர் இல்லாததால் கடந்த மாதத்தில் கட்டிய பணத்தையே மீண்டும் கட்டச்சொல்கின்றனர்.சி.என்.பாளையத்தில் காலியாக உள்ள வீட்டின் மின்சார மீட்டர் பழுதடைந்த நிலையில்,ஆய்வு செய்த அதிகாரிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன் வந்த அதே மின் தொகையை கட்ட சொல்லி கூறுகின்றனர்.இதனால் குடும்பமே இல்லாத வீட்டிற்கு ரூ.2795 கட்ட வேண்டிய கொடுமை நடந்து வருகிறது.ஆகையால் மாவட்ட மின்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த மின்சார மீட்டர் கழட்டியதும், புதிய மீட்டரை பொருத்திடவும், புதிய மின்இணைப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடி இணைப்பு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ