உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடும்ப தகராறு: கணவர் தற்கொலை

குடும்ப தகராறு: கணவர் தற்கொலை

குறிஞ்சிப்பாடி: குடும்பத் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடுர்குப்பத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ், 37; இவர், அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவரது மனைவி கங்கா,30; கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. கடந்த 14ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த முத்துராஜ் விஷம் குடித்தார். இதனை கங்கா தடுக்க முயன்றும் முடியவில்லை. இதனால், கங்காவும் விஷம் குடித்து மயங்கினார். இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கங்கா உடல்நிலை தேறினார். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துராஜ், நேற்று காலை இறந்தார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை