9 வயது மகளுக்கு தொல்லை : போக்சோவில் தந்தை கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே 9 வயது மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு, 9 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள், 8 வயதில் ஒரு மகன் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக கேரளாவில் கூலி வேலை பார்த்துவந்த அந்த நபர், கடந்த 6 மாதங்களாக வீட்டில் இருந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு தனது 9 வயது மகளை பாலியல் தொந்தரவுசெய்துள்ளார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.