மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
12-Jul-2025
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல், 53. இவரது மகள் சவுமியா, 21. கடலுார் தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஒரு வாரமாக சௌமியா கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த, 4ம் தேதி, காலை வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மகள் மாயமானது குறித்து சக்திவேல் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Jul-2025