கடலுக்கு செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
கடலுார்; கடலுார் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.கடலுார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் செய்திக்குறிப்பு;இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவுகின்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்கடலில் மீன்பிடிப்பு மேற்கொள்ளும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். மேலும், விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுத்தப்படுகிறது. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.