உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொது செயலாளருக்கு வரவேற்பு முன்னாள் அமைச்சர் சம்பத் அழைப்பு

பொது செயலாளருக்கு வரவேற்பு முன்னாள் அமைச்சர் சம்பத் அழைப்பு

கடலுார்: கடலுார் மாவட்டத்திற்கு இன்று 12ம் தேதி வருகை தரும் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியை வரவேற்க நிர்வாகிகள் திரண்டு வர வேண்டுமென, முன்னாள் அமைச்சர், வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் கூறியுள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று (12ம் தேதி) கடலுார், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை 4:15 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கடலுார் வரும் அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, மஞ்சக்குப்பம், எம்.ஜி.ஆர்., சிலை, டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 4:45 மணிக்கு மஞ்சக்குப்பத்தில் ரோடு ேஷாவாக சென்று மக்களை சந்திக்கிறார். அண்ணாபாலம் சிக்னல் அருகில் பேசுகிறார். பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை, மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கார் சிலை, அண்ணாகிராமம் அம்பேத்கர் சிலை உள்ளிட்ட இடங்களில் பேசுகிறார். இரவு 7:30 மணிக்கு பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் பேசுகிறார். இதையடுத்து நெய்வேலி தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். எனவே, பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை