மேலும் செய்திகள்
'போக்சோ'வில் கைதான வாலிபருக்கு குண்டாஸ்
05-Aug-2025
கடலுார்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த ஜூலை 19ம் தேதி, பாலுத்தங்கரை வழியாக பைக்கில் சென்றபோது, அதே ஊரை சேர்ந்த குப்புசாமி மகன் சிவனேசன்,19, என்பவர், தாக்கி கொலை செய்ய முயன்றார். புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார், சிவனேசனை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.இவரின் குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிவனேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், கடலுார் மத்திய சிறையில் சிவனேசனிடம், போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செயவதற்கான உத்தரவு நகலை வழங்கி கைது செய்தனர்.
05-Aug-2025