குட்கா பதுக்கியவர் கைது
விருத்தாசலம் : பெட்டிக்கடையில் குட்கா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பாலக்கரை இறக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செயதனர். இது தொடர்பாக கடைக்காரர் பூதாமூர் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்தன், 37; என்பவரை போலீசார் கைது செய்தனர்.