உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வைக்கோல் போர் எரிந்து சேதம்

வைக்கோல் போர் எரிந்து சேதம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மர்மமான முறையில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து சேதமானது.விருத்தாசலம் அடுத்த சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 40. இவரது வயலில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் நேற்று மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்து சென்ற மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வைக்கோல் போரில் பரவிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வைக் கோல் போர் முற்றிலும் சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை