உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்,41; இவரது மனைவி முத்துலட்சுமி, 40;மணிகண்டன் குடிபழக்கம் உள்ளவர். குடிபோதையில் மனைவியுடன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !