மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு மயக்கம் நெய்வேலியில் பரபரப்பு
21-Jun-2025
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது.பள்ளி முதல்வர் புனிதவள்ளி தலைமை தாங்கினார். யோகா பயிற்சியாளர்கள் சிவவிஸ்வநாதன், செல்வம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு யோகாவின் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர்.மேலும் யோகா என்ற எழுத்து வடிவில் அமர்ந்து யோகா தினத்தினை சிறப்பித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், பரமேஸ்வரி, ஆரோக்கியமெர்சி செய்திருந்தனர்.
21-Jun-2025