உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அருணாச்சலா பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்

அருணாச்சலா பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்

கடலுார் : குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலர் சட்டநாதன், நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை எழுதும் போட்டி, சதுரங்க விளையாட்டுப் போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. தமிழ் ஆசிரியர் சண்முகவேல், உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பள்ளி இயக்குனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். துணை முதல்வர் அபிராமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !