உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடலுார்: கடலுார் வில்வராயநத்தம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழா, கடந்த 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 29ம் தேதி வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜை, 108 யாக திரவிய ஹோமம், இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. கும்பாபிஷேக விழா தினமான நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின் கடம் புறப் பாடாகி வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் வில்வராயநத்தம் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை