மேலும் செய்திகள்
மகள் மாயம்; தாய் புகார்
14-Oct-2025
வடலுார்: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்துாரை சேர்ந்தவர் அப்துல் ஹாலிக் என்பவரின் 8 வயது மகன், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் சிறார் இல்லத்தில் தங்கி, அதே பகுதி அரசு பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 24ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற சிறுவனை காணவி ல்லை. இதுகுறித்து காப்பக வார்டன் நாகராஜன், வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது, சிறுவனை, கொள்ளிடம், தைக்கால், சந்தைதோப்பு பகுதியை சே ர்ந்த ஷேக் சாகுல் ஹமீது, 41; என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. சிறு வனின் தாயாருடன் ஏற்பட்ட பிரச்னையில், ஷேக் சாகுல் ஹமீது, சிறுவனை கடத்தி வைத்துக்கொண்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டியது தெரியவந்தது. அதையடுத்து, ஷேக் சாகுல் ஹமீது பயன்படுத்திய மொபைல் போன் டவரை வைத்து விசாரணை நடத்தியபோது, அவர் சென்னை மணலியில் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார் சென்னை சென்று, ஷே சாகுல் அமீதை கைது செய்து, சிறுவனை மீட்டனர்.
14-Oct-2025