மேலும் செய்திகள்
மணல் கடத்திய வாலிபர் கைது
19-Sep-2025
விருத்தாசலம்; பைக்கில் ஆற்று மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று தேவங்குடி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, க.புத்துார் கிராமத்தை சேர்ந்த கமலகண்ணன், 38, என்பவர் பைக்கில் சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து கமலகண்ணனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
19-Sep-2025