உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வலை

பண்ருட்டி; பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த வீரப்பெருமா நல்லுார் செட்டிக்குள தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ், 45; இவர் கடந்த 13ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து அவரது தாய், அளித்த புகாரின் பேரில், மோகன்ராஜ் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ