உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஜி.ஆர்., சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு

எம்.ஜி.ஆர்., சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு

பரங்கிப்பேட்டை: பு.முட்லுாரில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நேற்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,பிறந்த நாள் விழா நடந்தது.ஒன்றிய அவை தலைவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் வரவேற்றார். எம்.ஜி.ஆர்., சிலைக்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரவி, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் சங்கர், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராஜா, ஊராட்சி முன்னாள் தலைவர் மகேஷ், முன்னாள் துணை தலைவர் விஜயராஜா, நிர்வாகிகள் கனகராஜன், கல்யாணசுந்தரம், பாலமுருகன், செழியன் உட்பட பலர், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை