மேலும் செய்திகள்
மகள் மாயம் தாய் புகார்
22-Jun-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார். விருத்தாசலம் அடுத்த குருவனக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் நிவேதா,19; கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிவேதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் பத்மாவதி அளித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, நிவேதாவை தேடி வருகின்றனர்.
22-Jun-2025