தாய் மாயம் மகன் புகார்
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, ரெட்டியார் காலனி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி கலைச்செல்வி, 55; இவர் கடந்த, 17ம் தேதி காலை, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து அவரது மகன் பாஸ்கரன் கொடுத்துள்ள புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.