உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  3 குழந்தைகளுடன் தாய் மாயம்

 3 குழந்தைகளுடன் தாய் மாயம்

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர், சொசைட்டி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 30; இவர், கிளிமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லோடுமேனாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி வித்யா, 23; துறையூர் சத்துணவு மையத்தில் சமையலராக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 22ம் தேதி உறவினர் வீட்டிற்கு 3 குழந்தைகளுடன் வித்யா சென்றார். ஆனால் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து வித்யா மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை