உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார்; கடலுார் மண்டல அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன், மா.கம்யூ.,கட்சியினர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் பணி ஓய்வு நேரத்தில் வழங்க வேண்டிய பணப்பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் பக்கீரான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ராஜேஷ் கண்ணன், வாஞ்சிநாதன், அமர்நாத், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல், போக்குவரத்து ஊழியர் சங்க மாநில நிர்வாகி பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை