மேலும் செய்திகள்
ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி
20-Sep-2025
கடலுார்: கடலுார் முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று துவங்குகிறது. கடலுார், புதுப்பாளையம் அப்பாவு தெரு முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று (22ம் தேதி) துவங்கி வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் காலை 9:00 மணிக்கு அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 1ம் தேதி மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் அம்பு உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி காலை 8:00 மணிக்கு தரைகாத்த காளியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்கி, கோவிலை வந்தடைகிறது. பின், அம்மனுக்கு அபிேஷகம் நடக்கிறது.
20-Sep-2025