உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் பாதாள காளி மற்றும் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கரா தேவி மண்டபத்தில் யாகவேள்விகள் துவங்கியது. மதியம் 2:30 மணிக்கு வேள்வியில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 3:00 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜை யில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை