உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த சிறுகிராமத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் இறந்தார். பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ராஜா,27; இவர் நேற்று சிறுகிராமம் அய்யனார் கோவிலில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றார். மாலை 4:00 மணிக்கு மொபைல் போனுக்கு சார்ஜர் போட்டுள்ளார். அப்போது சார்ஜரில் இருந்து மின்சாரம் தாக்கியதில், அவர் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராஜா இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை