உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்

விருத்தாசலம் : கடலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் ஜீவா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் அதிகாலை, வண்ணாங்குடி காடு பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே வந்த டிராக்டர் டிப்பரை மறித்து சோதனை செய்தபோது, 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடி, தலைமறைவானார்.உதவி புவியியலாளர் ஜீவா புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை