வீட்டு மனைப்பட்டா கேட்டு சலவை தொழிலாளர்கள் மனு
கடலுார்: வீட்டுமனைப்பட்டா கேட்டு சலவைத் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கத்தினர் மாநில செயலாளர் மணிகண்டன் தலைமையில் அளித்த மனு:விருத்தாசலம் அரசு அச்சகம் பின்புறம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சலவைத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லை. வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.