உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமி திருமணம் வாலிபர் மீது போக்சோ

சிறுமி திருமணம் வாலிபர் மீது போக்சோ

கடலுார்: கடலுார் அருகே 17 வயது சிறுமியை திருணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார் துறைமுகத்தைச் சேர்ந்தவர் நிஷாந்த், 26; இவருக்கு 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி நர்சிங் படித்து விட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார்.கடந்த 28ம் தேதி, கடலுார் அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது.இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், நிஷாந்த் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை