பெண் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீஸ் ஏட்டு கைது
கடலுார் : கடலுாரில் பெண் சப்இன்ஸ்பெக்டரை தாக்கிய புகாரில், போலீஸ் ஏட்டுவை புதுநகர் போலீசார் கைது செய்தனர்.கடலுார் வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர் சரண்யா,33. இவர் கடலுார் மாவட்ட எஸ்.பி.,அலுவலகத்தில் விரல் ரேகை பிரிவு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10மணிக்கு, அடையாளம் தெரிந்த நபர் ஒருவர் தன்னை தாக்கி, செல்போனை பிடுங்கி உடைத்ததாக கூறி, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில், சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரியும் பாலமுருகன் என்பவர், சரண்யாவவை தாக்கியது தெரிந்தது. பாலமுருகனை கைது செய்த போலீசார், பெண் சப்இன்ஸ்பெக்டரை தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.