ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கூட்டம்
கடலுார்; கடலுார் சட்டசபை தொகுதியின் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., சுந்தரராஜன் தலைமை தாங்கினார். தாசில்தார் மகேஷ், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஷோபா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரவி, 227 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், தீவிர சுருக்கமுறை திருத்த பணிக்கான முகாம் தொடர்பாகவும், ஒவ்வொரு வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிப்பார்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது.