மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
18-Dec-2025
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கடலுார், திருப்பாதிரிப் புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், உற்சவர் பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உட்பட 21 பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நாயகர் கோவில் உள்புறப்பாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
18-Dec-2025