உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு; 2 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு; 2 பேர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி; முன்விரோத தகராறு தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். குறிஞ்சிப்பாடி அடுத்த புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் கணபதி, 55; இளஞ்செழியன், 52; இருவருக்கும் நிலம் தொடர்பான முன்விரோதம் உள்ளது. இளஞ்செழியன் குறிஞ்சிப்பாடி பகுதியில் பத்திரப்பதிவு எழுத்தராக வேலை செய்கிறார். இந்நிலையில், இருவருக்கும் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார், கணபதி, இளஞ்செழியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ