உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இறந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி மறியல் முயற்சி

இறந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி மறியல் முயற்சி

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி குடும்பத்திற்கு, அரசு வேலை வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 55; இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு தனது நெல் வயலுக்கு சென்றார். அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதில், அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். செல்வம் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ளது. நேற்று அங்கு வந்த உறவினர்கள், கிராம மக்கள் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டுமென கூறி, பா.ம.க,, மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், மதியம் 1:00 மணிக்கு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த தாசில்தார் அரவிந்தன், விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை