உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் மாவட்டத்தில் நாளை நடக்கிறது

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் மாவட்டத்தில் நாளை நடக்கிறது

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (9ம் தேதி) நடக்கிறது.மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாசில்தார் அலுவலகங்களில், வட்ட வழங்கல் பிரிவில் காலை 10:00 மணி முதல் 1:00 வரையில் முகாம் நடக்கிறது.குடும்ப அட்டைதாரர்கள் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.முகாமில் கைரேகை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் மற்றும் 60 சதவீத பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகார சான்று கோரி மனு அளிக்கலாம்.கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனு அளிக்கலாம்.பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடைய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ