மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் 589 மனுக்கள் குவிந்தன
29-Jul-2025
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கடலுாரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ.,ராஜசேகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்களிடம் இருந்து 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
29-Jul-2025