உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்கள் குறைகேட்பு கூட்டம் 654 மனுக்கள் மீது விசாரணை

மக்கள் குறைகேட்பு கூட்டம் 654 மனுக்கள் மீது விசாரணை

கடலுார் : கடலுாரில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 654 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.45,000 வீதம் ரூ.3.60 லட்சம் மதிப்பில் 2 சென்ட் இலவச வீட்டுமனைப் பட்டா ஆணையை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜி, கலால் உதவி ஆணையர் சந்திரகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ