உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வேப்பூரில் கருவூலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வேப்பூர் : வேப்பூர் தாலுகா அறிவித்து 10 ஆண்டுகளாகியும், கருவூலம் அமைக்காததால் அரசு ஊழியர்கள், பொது மக்கள் அவதியடைகின்றனர்.விருத்தாசலத்தில் வேப்பூர் பிர்காவில் 32 கிராமங்களையும், திட்டக்குடியில் சிறுபாக்கம் பிர்காவில் 21 கிராமங்களையும் பிரித்து, கடந்த 2013ல் வேப்பூர் தாலுகா உருவாக்கப்பட்டது. வேப்பூர் பஸ் நிலையம் அருகிலுள்ள கட்டடத்தில் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. தாலுகா அறிவித்து 10 ஆண்டுகளாகியும் வேப்பூரில் கருவூலம் அமைக்க வில்லை.இதனால், தாலுகாவிற்குட்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியர்கள் பென்சன், வருவாய் கிராமங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை, பொது மக்கள் நில அளவைக்கு பணம் செலுத்த, 25 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலம் கருவூலத்திற்கு செல்கின்றனர். அரசு ஊழியர்கள், பென்சனர்கள் குறிப்பிட்ட நாளில் ஊதியம் பெற முடியவில்லை.இதனால், கால விரையம், கூடுதல் செலவினம் ஏற்படுவதுடன், வேப்பூர் தனி தாலுகாவாக அறிவித்தும் பயனற்ற நிலையில் உள்ளதாக அரசு ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, வேப்பூர் தாலுகாவில் அரசு கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை