மேலும் செய்திகள்
சரநாராயண பெருமாளுக்கு பாண்டுரங்கன் அலங்காரம்
01-Dec-2024
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஆண்டாள் ரங்கமன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், 6:00 மணிக்கு தனுர்மாத பூஜை, 7:30 மணிக்கு நித்யபடி பூஜை நடந்தது. 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு , 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் இருந்து சூடிக்கொடுத்த மாலையும், கிளியும் சாற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
01-Dec-2024