உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடியிருப்போர் சங்கம் அஞ்சலி  

குடியிருப்போர் சங்கம் அஞ்சலி  

கடலுார்; கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு கடலுாரில் அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ரங்கநாதன், காசிநாதன், பகிரதன், ஆறுமுகம், குழந்தைவேலு, கலியமூர்த்தி, கோமதிநாயகம், சண்முகம், பாலு, ஜெயபால், குமார், செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழக அரசு கூட்ட மேலாண்மை தொடர்பாக அனைவரும் கடைபிடிப்பதற்கு ஏற்ற சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை