கொள்ளையடிக்க திட்டம்: நெய்வேலியில் 9 பேர் கைது
நெய்வேலி: நெய்வேலியில் வீடுகளில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், நெய்வேலி, இந்திரா நகர், தைலம் மர தோப்பில் மர்ம கும்பல் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் நெய்வேலி இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, 9 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், மேல் வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த வீரமணி,27; நெய்வேலி, இந்திரா நகர் சதீஷ்,23; சஞ்சய்,23; தனுஷ்,18; அறிவழகன்,19; ரவிக்குமார்,23; பவித்ரன்,29; வடக்குத்து சூர்யா,24; நெய்வேலி நவீன்,20; என்பதும், கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 9 பேரையும் கைது செய்து, அரிவாள், இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.