உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தேரி கோவிலில் சனி பிரதோஷம்

புத்தேரி கோவிலில் சனி பிரதோஷம்

திட்டக்குடி : புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் சந்திர மவுலீஸ்வரருக்கு நேற்று முன்தினம் சனி மகா பிரதோஷத்தையொட்டி காலை 9:30 மணிக்கு உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 10:00 மணிக்கு பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவைகளால் சிறப்பு அபிஷேகம, 10:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை