உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆடுகள் மர்மமான முறையில் இறப்பு

ஆடுகள் மர்மமான முறையில் இறப்பு

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன. மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வெண்ணிலா,41.இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள வயலில், நேற்று 6 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலை மேய்ச்சலுக்கு பின் திரும்பிய ஆடுகள் வீட்டின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் ஆடுகள் இறந்தது எப்படி என, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை