விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி
விருத்தாசலம்; கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்பட்டது.இதையொட்டி, முன்னதாக காலை 10:00 மணியளவில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது.அதைத் தொடர்ந்து, இரவு 7:00 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் கோவில் முன் எழுந்தருள 5 சொக்கப்பனைகள் ஏற்பட்டது.அதைத்தொடர்ந்து, இரவு 8:30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.