மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழா
20-Jan-2025
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பெற்றோர் தினம், மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா, ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் பங்கேற்று, மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். கவுரவ விருந்தினராக புதுச்சேரி பிளஸ்ட் மதர் தெரசா மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆனந்தராஜ் பங்கேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், தலைமை ஆசிரியர் ஜெயபாலன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பங்கேற்றனர்.
20-Jan-2025